/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மீனவர் வெட்டிக்கொலை மகனுக்கும் அரிவாள் வெட்டு
/
மீனவர் வெட்டிக்கொலை மகனுக்கும் அரிவாள் வெட்டு
ADDED : மே 09, 2024 02:50 AM
திருநெல்வேலி:கூடங்குளம் அருகே நள்ளிரவில் மீன் பிடிக்க சென்ற மீனவரும் அவரது மகனும் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் மீனவர் பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கூத்தங்குழி, பாத்திமாநகரை சேர்ந்தவர் டேவிட் 56. மகன் அனாலிஸ் 24. மீனவர்கள்.
இவர்கள் அதிகாலை 2:00 மணிக்கு கடலில் மீன் பிடிக்க கிளம்பினர். கடற்கரைக்கு மகன் அனாலிஸ் டூவீலரில் தந்தை டேவிட்டை அழைத்து சென்றார். செல்லும் வழியில் மூன்று பேர் கும்பல் வழிமறித்தனர். இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். சக மீனவர்கள் இருவரையும் மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் டேவிட் இறந்தார். அனாலிஸ் சிகிச்சையில் உள்ளார். அவர்களது உறவினரான சகாய மிக்கேல்ராஜ் உள்ளிட்ட 3 பேரை கூடங்குளம் போலீசார் தேடி வருகின்றனர்.