/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சிறையில் மோதல் வார்டன் மீது தாக்குதல்
/
சிறையில் மோதல் வார்டன் மீது தாக்குதல்
ADDED : செப் 14, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மத்திய சிறையில் மதுரையை சேர்ந்த தண்டனை கைதி மீனாட்சி சுந்தரம், சக கைதி ராஜேைஷ தாக்கினார். வார்டன் மகேந்திரன் சென்று ராஜேஷை மீட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.
அப்போது ஆத்திரமுற்ற கைதி மீனாட்சி சுந்தரம் வார்டன் மகேந்திரனை கடுமையாக தாக்கினார். காயமுற்ற வார்டன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.