/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை பிரபல ரவுடி கொலை வழக்கு ஒருவருக்கு துாக்கு; 4 பேருக்கு 'ஆயுள்'
/
நெல்லை பிரபல ரவுடி கொலை வழக்கு ஒருவருக்கு துாக்கு; 4 பேருக்கு 'ஆயுள்'
நெல்லை பிரபல ரவுடி கொலை வழக்கு ஒருவருக்கு துாக்கு; 4 பேருக்கு 'ஆயுள்'
நெல்லை பிரபல ரவுடி கொலை வழக்கு ஒருவருக்கு துாக்கு; 4 பேருக்கு 'ஆயுள்'
ADDED : மார் 07, 2025 01:24 AM

திருநெல்வேலி:பிரபல ரவுடி கொலை வழக்கில் ஒருவருக்கு துாக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு பெண்கள் உட்பட 3 பேருக்கு இரண்டு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி அடுத்துள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் வைகுண்டம், 45. இவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. ஊராட்சி தேர்தல் மோதல் உள்ளிட்ட ஒரே சமூகத்தினர் இடையே நடந்த கொலைகள், வெட்டுக்குத்து வழக்குகளில் வைகுண்டம் ஒரு வழக்கில் 2022 மார்ச் 10ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி சாட்சி கூற இருந்தார்.
அவர் சாட்சி கூறினால், வழக்கில் தண்டனை கிடைக்கலாம் என திட்டமிட்ட கும்பல், அன்று காலை அவர் அங்குள்ள கால்வாயில் குளிக்க சென்ற போது வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு, திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கின் முதல் குற்றவாளியான செல்வராஜுக்கு, துாக்கு தண்டனையும், அந்தோணி பிரபாகர், அருள் பிலிப், ஆண்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டர் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி கே.சுரேஷ் குமார் நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், ராஜன், செல்வ லீலா, ஜாக்குலின் ஆகியோருக்கு இரண்டு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.