/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆடிமாத பூஜைக்காக சபரிமலை நடை வரும் 15ம் தேதி திறப்பு
/
ஆடிமாத பூஜைக்காக சபரிமலை நடை வரும் 15ம் தேதி திறப்பு
ஆடிமாத பூஜைக்காக சபரிமலை நடை வரும் 15ம் தேதி திறப்பு
ஆடிமாத பூஜைக்காக சபரிமலை நடை வரும் 15ம் தேதி திறப்பு
ADDED : ஜூலை 09, 2024 10:56 PM
நாகர்கோவில்:தமிழ் மாதங்களில் முதல் ஐந்து நாட்கள் சபரிமலையில் பூஜைகள் நடைபெறும். இதற்காக அதற்கு முந்தைய மாதம் கடைசி நாளில் மாலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் ஆடி 1, ஜூலை 17-ல் வருகிறது. ஆனால், கேரளாவில் ஜூலை 16ல் ஆடி 1 வருகிறது. இதனால், சபரிமலை நடை ஜூலை 15 மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஜூலை 16 அதிகாலை, 5:00க்கு நடை திறக்கப்பட்டதும் தந்திரி மகேஷ் மோகனரரு அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின் நெய்யபிஷேகத்தை துவக்கி வைப்பார். எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், மாலையில் தீபாராதனை இரவு அத்தாழ பூஜை, இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். காலை முதல் இரவு வரை நடைபெறும் உதயாஸ்தமன பூஜையும் உண்டு.
ஜூலை 20 இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த தேதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என, தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.