/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெட்ரோல் குண்டு வீச்சில் பா.ம.க., பிரமுகர் காயம்
/
பெட்ரோல் குண்டு வீச்சில் பா.ம.க., பிரமுகர் காயம்
ADDED : மே 01, 2024 11:36 PM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் பா.ம.க., பிரமுகர் மீது மர்மகும்பல் பெட்ரோல் குண்டு வீசியதில் அவர் காயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் செல்லப்பா 59. பா.ம.க., திருநெல்வேலி மாவட்ட விவசாய அணி செயலாளர். இவரது மனைவி ரெஜீலா; வழக்கறிஞர். செல்லப்பா, திருச்செந்தூரில் அரசு மற்றும் பொது நிலங்களை ஆக்கிரமிப்போருக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்து வருகிறார்.
இதனால் அவருக்கு முன்விரோதம் இருந்தது. தற்போது திருநெல்வேலி கே.டி.சி.நகரில் வசிக்கிறார். மேலப்பாட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருந்த போது நேற்று காலை 10:30 மணியளவில் ஒரு கும்பல் அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது.
இதில் குண்டுகள் வெடிக்காமல் விழுந்து சிதறியதில் அவர் காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

