ADDED : ஆக 12, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் செய்யது தமீம் 31. இவருக்கு சொந்தமான நிலம் சீதபற்பநல்லூரில் உள்ளது. குத்தகைக்கு தரப்பட்ட நிலங்களை மீட்க போராடி வந்தார். மேலப்பாளையத்தில் நடத்தி வரும் ஆன்லைன் மையத்தில் இருந்தபோது ஆக., 5 இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலையில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்தும், இதன் பின்னணியில் உள்ளவர்களை விசாரிக்க கோரியும், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மேலப்பாளையத்தில் நேற்று கடையடைப்பு நடந்தது.

