sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கள்ளக்காதலை வெளியே கூறிய தாய், மகனை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

/

கள்ளக்காதலை வெளியே கூறிய தாய், மகனை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்காதலை வெளியே கூறிய தாய், மகனை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்காதலை வெளியே கூறிய தாய், மகனை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

4


ADDED : செப் 05, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:38 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மானுார் அருகே கள்ளக்காதல் விவகாரத்தை மற்றவர்களிடம் தெரிவித்த தாய், மகனை வெட்டி கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மானூர் அருகே குறிச்சிகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 45. 2010 ஜூலை 20 தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள படப்பில் வைக்கோல் எடுக்க சென்ற போது சிராஜுதீன் 41, என்பவர் கள்ளக்காதலியான பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார். இதனை கண்டு சுப்பிரமணி இருவரையும் கண்டித்து அனுப்பினார்.

இச்சம்பவத்தை சுப்பிரமணி, மனைவியிடமும் உறவினர்களிடமும் தெரிவித்தார். ஆத்திரமுற்ற சிராஜுதீன் நண்பர்களுடன் சேர்ந்து சுப்பிரமணியை கொல்ல திட்டமிட்டார். 2019 ஜூலை 22ல் குறிச்சிகுளத்தில் வயலுக்கு சென்று விட்டு திரும்பிய சுப்பிரமணியையும், அவரது தாயார் கோமதியையும் 65, சிராஜுதீன், அவரது நண்பர்கள் லத்தீப், நாகூர் மீரான் மற்றும் சிராஜுதீனின் காதலி ஆகியோர் சேர்ந்து வெட்டியும் கம்பால் தாக்கியும் கொலை செய்தனர்.

சிராஜூதீன் உள்ளிட்ட 4 பேர் மீதும் திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இக்கொலை வழக்கு நடந்தது. விசாரணையின் போது லத்தீப் இறந்து விட்டார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் சிராஜூதீனின் காதலியை விடுதலை செய்த நீதிபதி பத்மநாபன், குற்றம்சாட்டப்பட்ட சிராஜுதீன், நாகூர் மீரானுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us