/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரசு பஸ் கவிழ்ந்து 14 பயணியர் காயம்
/
அரசு பஸ் கவிழ்ந்து 14 பயணியர் காயம்
ADDED : செப் 10, 2025 03:25 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே அரசு பஸ் சாலையில் கவிழ்ந்த விபத்தில், டிரைவர் உட்பட, 14 பயணியர் காயமடைந்தனர்.
திருச்செந்துாரில் இருந்து அரசு பஸ் நேற்று திருநெல்வேலி நோக்கி சென்றது. கொங்கராயக் குறிச்சியை சேர்ந்த டிரைவர் வடிவேல், பஸ்சை ஓட்டினார்.
அதிகாலை, 4:00 மணிஅளவில், ஆரோக்கியநாதபுரம் அருகே வந்த போது, மாடு குறுக்கே பாய்ந்தது. இதில், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் பஸ் இறங்கியது.
பின், பஸ்சை ரோட்டுக்கு கொண்டுவர டிரைவர் முயற்சித்தபோது, ரோட்டில் பஸ் கவிழ்ந்தது.
இதில், டிரைவர் மற்றும் 14 பயணியர் காயம்அடைந்தனர். ஆரோக்கிய நாதபுரம் கிராம மக்கள், பஸ் கண்ணாடிகளை உடைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆம்னி பஸ் விபத்து புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பைபாஸ் சாலையில், நேற்று முன்தினம் இரவு, முதுகுளத்துாரில் இருந்து, தனியார் ஆம்னி பஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
பஸ்சை, மதுரை மாவட்டம், மேலுாரை சேர்ந்த மாதவன், 40, ஓட்டினார். பஸ்சில், 36 பயணியர் இருந்தனர்.
திருமயம் பைபாஸ் சாலையில், சென்னை நோக்கி சென்றபோது, வழி தெரியாமல் ஆம்னி பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால், பஸ், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், 10 பயணியர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். திருமயம் போலீசார் விசாரிக்கின்றனர்.