ADDED : ஆக 27, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 58 வயது நபருக்கு25 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே தம்புபுரத்தை சேர்ந்தவர் முத்தையா 58. இவர் 2022ல் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
வழக்கு திருநெல்வேலி போச்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் முத்தையாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.