sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நண்பரை கொன்று புதைத்த சிறார்கள் உட்பட 4 பேர் சிக்கினர்

/

நண்பரை கொன்று புதைத்த சிறார்கள் உட்பட 4 பேர் சிக்கினர்

நண்பரை கொன்று புதைத்த சிறார்கள் உட்பட 4 பேர் சிக்கினர்

நண்பரை கொன்று புதைத்த சிறார்கள் உட்பட 4 பேர் சிக்கினர்

1


ADDED : ஏப் 09, 2025 02:57 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 02:57 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன், செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், 20; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மதியம் நண்பர்களுடன், தச்சநல்லுாரில் மது அருந்தினார். அவர் வீடு திரும்பாததால், அவரது தாய், நண்பர் சிவா, 26, என்பவரிடம் விசாரிக்க, அவர் மழுப்பினார்.

இந்நிலையில், ஆறுமுகத்தை மது அருந்த அழைத்துச் சென்றவர்களே போலீசுக்கு போன் செய்து, 'குருநாதன் கோவில் பகுதியில் ஒரு கொலை நடந்துள்ளது; கண்டுபிடியுங்கள்' என, தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில், செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சிவா, 17 வயது சிறுவர்கள் இருவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து, ஆறுமுகத்தை கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை புதைத்தது தெரிய வந்தது. ஆறுமுகம் உடலை போலீசார் மீட்டனர். சிவா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.

கொலையாளிகளில் ஒருவரது உறவினர் பெண்ணை ஆறுமுகம் காதலித்ததும், அதை கைவிட மறுத்ததும் இந்த கொலைக்கு காரணம் என, தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us