நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷனில் அரவிந்த் கண் மருத்துவமனை செயல்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவம் பெறுகின்றனர்.
நேற்று காலை 9:00 மணிக்கு செவிலியர் ஒருவரின் அலைபேசிக்கு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. மருத்துவமனை காலை நேரங்களில் அதிக எண்ணிக்கையில் வெளி நோயாளிகளுடன் பரபரப்பாக இருக்கும் என்பதால் போலீசார் மோப்ப நாய்களுடன் மதியம் 2:00 மணிக்கு சோதனை மேற்கொண்டனர்.
வெறும் மிரட்டல் என தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர், கோயம்புத்தூரை சேர்ந்த மகேஷ் என்பதும் கோவை மருத்துவமனையில் கேண்டீனில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.