/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஓய்வு எஸ்.ஐ., கொலையில் காட்டிக்கொடுத்த சிறுவன் கைது
/
ஓய்வு எஸ்.ஐ., கொலையில் காட்டிக்கொடுத்த சிறுவன் கைது
ஓய்வு எஸ்.ஐ., கொலையில் காட்டிக்கொடுத்த சிறுவன் கைது
ஓய்வு எஸ்.ஐ., கொலையில் காட்டிக்கொடுத்த சிறுவன் கைது
ADDED : மார் 23, 2025 02:02 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் விருப்ப ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில், மொபைல் போனில் கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் மார்ச் 18 அதிகாலை, 5:40 மணிக்கு மசூதியில் தொழுகையை முடித்து வெளியே வந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
அவர் முத்தவல்லியாக இருந்து நிர்வாகம் செய்த தைக்கா நிலம் தொடர்பான சர்ச்சையில், அதே பகுதியில் வசிக்கும் தவ்பீக் தரப்பினரால் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில், கார்த்திக், 32, அக்பர் ஷா, 32, ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த தவ்பீக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
ஜாஹிர் உசேனை கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாக, பிளஸ் 1 மாணவரான 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் சரணடைந்த அக்பர் ஷாவின் உறவினரான இச்சிறுவன், ஜாஹிர் உசேன் காலையில் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு செல்லும் பாதையை கண்காணித்து கொலையாளிகளுக்கு கூறியது விசாரணையில் தெரியவந்தது. விசாரணை முடிந்து சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டார்.