ADDED : மார் 04, 2024 06:59 AM

திருநெல்வேலி : சேரன்மகாதேவி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாயினர். ஐந்து பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பத்தமடையை சேர்ந்தவர் காதர்மைதீன் 34. அவரது காரில் பத்தமடையைச்சேர்ந்த வாலிபர்களுடன் சேரன்மகாதேவி அருகே தாமிரபரணி வெள்ளநீர் கால்வாயில் குளிக்கச் சென்றனர்.
பின்னர் நேற்று மாலை 4:30 மணியளவில் பத்தமடை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை காதர்மைதீன் ஓட்டினார். கங்கனான்குளம் -- சேரன்மகாதேவி இடையே வந்த போது நாய் குறுக்கே வந்ததால் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் கவிழ்ந்தது. இதில் பத்தமடையை சேர்ந்த அலி திவான் மைதீன் 23, முகமது பைசல் 30, பலியாயினர். நாகூர் மைதீன் 23, ஹசன் 21, பாவா மைதீன் 23, அக்பர் 24, காதர் மைதீன் 34, ஆகியோர் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சேரன்மகாதேவி போலீசார் விசாரித்தனர்.

