/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பாதயாத்திரை கார் மோதி பக்தர் பலி
/
பாதயாத்திரை கார் மோதி பக்தர் பலி
ADDED : ஜன 15, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர் அருணாசலம், கார் மோதி இறந்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் 38.
நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருச்செந்துார் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றார். சங்கரன்கோவில் -திருநெல்வேலி சாலையில் மானுார் அருகே சென்றபோது நேற்று காலை 6:00 மணிக்கு சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் அருணாசலம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கார் டிரைவர் கரிவலம்வந்தநல்லுார் தங்கராஜை 38, மானுார் போலீசார் கைது செய்தனர்.

