sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் நெல்லையில் வியாபாரிகள் மறியல்

/

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் நெல்லையில் வியாபாரிகள் மறியல்

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் நெல்லையில் வியாபாரிகள் மறியல்

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் நெல்லையில் வியாபாரிகள் மறியல்


ADDED : ஜன 05, 2024 10:33 PM

Google News

ADDED : ஜன 05, 2024 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் டிச., 17, 18ல் பெய்த அதிகன மழையில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, சேவியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

எனவே, மாநகராட்சி கமிஷனர் தாக்கரே, போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை, மக்கள் தாங்களாக அகற்றிக் கொள்ள வேண்டும்; அகற்றாதவற்றை மாநகராட்சி அகற்றும் என அறிவித்திருந்தார்.

இதன்படி, கடந்த இரண்டு நாட்களாக வண்ணார்பேட்டை, புது பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது.

புது பஸ் ஸ்டாண்ட் என்.ஜி.ஓ., - பி., காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கூறி வணிகர்கள், இரண்டு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் சாலையில் சிலர் மறியல் செய்தனர். போலீசார் பேச்சு நடத்தி போராட்டத்தை முடித்து வைத்தனர்.






      Dinamalar
      Follow us