/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தீயணைப்பு அலுவலருக்கு ஜாமின் மறுப்பு
/
தீயணைப்பு அலுவலருக்கு ஜாமின் மறுப்பு
ADDED : பிப் 04, 2026 03:57 PM

நமது நிருபர்
திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநர் சரவணனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சிக்க வைத்த வழக்கில், லட்சக்கணக்கான பணத்தை அலுவலகத்தில் மறைத்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ், 50 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த வழக்கில் மீண்டும் ஜாமின் கோரி வீரராஜ் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது.இதுவரை அவரை கைது செய்யவில்லையா என நீதிபதி ஸ்ரீமதி கேள்வி எழுப்பினார்.
பணத்தை நேரில் கொண்டு வந்து வைத்த மும்பை நபர் விஜய் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வீரராஜ் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது உறுதியாகத் தெரிய வந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வீரராஜுக்கு ஜாமின் வழங்க நீதிபதி மறுத்தார். மேலும், குற்றச்செயலில் நேரடியாக ஈடுபட்டவர்களுடன் வீரராஜ் கொண்டுள்ள தொடர்புகள் மற்றும் அதற்கான ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டார்.

