/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெண்ணிடம் அத்துமீறல் வன ஊழியர் கைது
/
பெண்ணிடம் அத்துமீறல் வன ஊழியர் கைது
ADDED : அக் 27, 2025 12:47 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மலைப்பகுதி மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வனத்துறை ஊழியர் அய்யாகுட்டி 49, போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் அவர் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார்.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் மனைவியுடன் வசிக்கிறார். அக்., 23 ல் மளிகைப்பொருட்கள் வாங்க கல்லிடைக்குறிச்சிக்கு தொழிலாளி சென்றார். அந்த நேரத்தில் மாஞ்சோலை வனத்துறையில் வாட்சராக பணிபுரியும் அய்யாகுட்டி வீட்டில் தனியாக இருந்த தொழிலாளியின் மனைவியிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றார்.
தொழிலாளி அளித்த புகாரின் பேரில் மாஞ்சோலை போலீசார் விசாரித்து அய்யாகுட்டியை கைது செய்தனர். இதனால் அவரை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.

