sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கும்பல் கைது

/

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கும்பல் கைது

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கும்பல் கைது

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கும்பல் கைது


ADDED : ஜூன் 24, 2025 06:24 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி வ.உ.சி மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு மேலப்பாளையத்தை சேர்ந்தவரும் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீசாக பணிபுரிபவருமான முகமது ரஹ்மத்துல்லாஹ் 29, தமது மனைவி, ஆறு மாத குழந்தையுடன் பூங்காவிற்கு வந்திருந்தார்.

ரவுடிகள் சிலர் சேர்ந்து ஒருவரை தாக்கினர். சாதாரண உடையில் இருந்த ரஹ்மத்துல்லாஹ் கண்டித்தார். அந்த கும்பலில் ஒருவன் ரஹ்மத்துல்லாஹ்வின் வலது கையில் அரிவாளால் வெட்டினான். அவர் பலத்த காயமுற்றார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் போலீசார் இரவோடு இரவாக ஹரீஷ் என்ற ஹரிசுப்பிரமணியன் 21, மதன் என்ற மாணிக்க செல்வம் 20, பார்த்திபன் 20, தினேஷ் 21 மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஹரீஷ் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us