sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மேலப்பாளையத்தில் பரவுது மஞ்சள்காமாலை

/

மேலப்பாளையத்தில் பரவுது மஞ்சள்காமாலை

மேலப்பாளையத்தில் பரவுது மஞ்சள்காமாலை

மேலப்பாளையத்தில் பரவுது மஞ்சள்காமாலை


ADDED : ஏப் 23, 2025 02:54 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால் குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கும் மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டல பகுதியில் கல்வத்நாயகம் தெரு, அரசு மருத்துவமனை தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களில் உட்புறமாக கழிவு நீர் கலந்துள்ளது. இதனால் மாநகராட்சி குடிநீர் கலங்கலாக வந்துள்ளது. இதை பருகிய பலருக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் ராணி கூறுகையில் '' மாநகராட்சி குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் கூறியதால் கல்வத்நாயகம் தெருவில் குழிதோண்டி பைப் லைன் சீரமைக்கும் பணி நடக்கிறது. ஒரே பகுதியில் 6 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. எனவே அங்கு மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். கோடையில் மாநகராட்சி பகுதி முழுவதுமே பொதுமக்கள் குடிநீரை சுட வைத்து பருகும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us