sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 கடன் கேட்டு வரவழைத்து 16 பவுன் திருடியவர் கைது

/

 கடன் கேட்டு வரவழைத்து 16 பவுன் திருடியவர் கைது

 கடன் கேட்டு வரவழைத்து 16 பவுன் திருடியவர் கைது

 கடன் கேட்டு வரவழைத்து 16 பவுன் திருடியவர் கைது


ADDED : டிச 15, 2025 02:41 AM

Google News

ADDED : டிச 15, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை செந்தமிழ்நகரைச் சேர்ந்தவர் ஹரிஹரன் 27. இவருக்கு மனைவி, கைக்குழந்தை உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை சித்திரை மகராஜபுரத்தைச் சேர்ந்தவர் அகஸ்தீசன் 47. பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரிடம் ஹரிஹரன், தான் அமெரிக்காவிற்கு ஆப்பிள் ஏற்றுமதி செய்வதாகவும் அதற்காக தூத்துக்குடியில் குடோன் வைத்துள்ளதாகவும், தொழில் அபிவிருத்திக்கு ரூ. 20 லட்சம் கடன் வேண்டும் எனவும் கேட்டுள்ளார். குடோனை பார்வையிட அகஸ்தீசன் மனைவியுடன் திருநெல்வேலி வந்தார்.

டிச., 10 இரவு கே.டி.சி.நகர் அருகே சாம் காட்டேஜ் என்ற விடுதியில் இரு குடும்பத்தினரும் பக்கத்து பக்கத்து அறை யெடுத்து தங்கினர்.

மறுநாள் காலை அகஸ்தீசன் பார்த்த போது தன் அறை திறந்து கிடந்ததாகவும் பக்கத்து அறையில் தங்கி இருந்த நபரையும் அவரது மனைவியையும் காணவில்லை எனவும், மனைவியின் தாலி செயின் உள்ளிட்ட நகைகள் 16 பவுன் திருடு போனதாகவும் புகார் செய்தார்.

அதையடுத்து ஹரிஹரனை போலீசார் கைது செய்து 16 பவுன் நகைகளை மீட்டனர். அவர் பெயரை சிவா என மாற்றி அறையெடுத்து நகையை பறித்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us