sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

திருநெல்வேலி ஓய்வு எஸ்.ஐ., கொலை விவகாரம் அறிக்கை கேட்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்

/

திருநெல்வேலி ஓய்வு எஸ்.ஐ., கொலை விவகாரம் அறிக்கை கேட்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்

திருநெல்வேலி ஓய்வு எஸ்.ஐ., கொலை விவகாரம் அறிக்கை கேட்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்

திருநெல்வேலி ஓய்வு எஸ்.ஐ., கொலை விவகாரம் அறிக்கை கேட்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்


ADDED : மார் 26, 2025 01:40 AM

Google News

ADDED : மார் 26, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ.,ஜாஹிர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மனித உரிமை மீறல் ஏற்பட்டதா என தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இதில் டி.ஜி.பி., மற்றும் திருநெல்வேலி கலெக்டர் நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி டவுனை சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் 60. கடந்த 18ம் தேதி காலையில் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அவர் அங்குள்ள தைக்கா எனப்படும் முஸ்லிம் மத வழிபாட்டுத்தலத்தின் நிர்வாகியாக இருந்தார். அந்த தைக்காவுக்கு சொந்தமான வக்பு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துவருவதாக தொடர்ந்து புகார் அளித்துவந்தார். அந்த நிலத்தை கையகப்படுத்த முயன்ற அதே பகுதியை சேர்ந்த நுார்னிஷா, அவரது கணவர் தவ்பீக் (எ) கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர், அவரை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இக்கொலை தொடர்பாக ஏற்கனவே தவ்பீக் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜாஹிர் உசேன் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத, டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் டவுன் உதவி கமிஷனர் செந்தில் குமார் ஆகியோர் ‛சஸ்பெண்ட்'செய்யப்பட்டனர்.

இதற்கிடையே தேசிய மனித உரிமை ஆணையம், இந்தக் கொலை சம்பவம் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தானாக முன் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஜாஹிர் உசேன், வக்பு நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளில் ஈடுபட்டிருந்தவர். போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதால், இந்த விவகாரம் குறித்து தமிழக டி.ஜி.பி.,யும், திருநெல்வேலி கலெக்டரும் நான்கு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us