sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண உற்ஸவம்

/

 நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண உற்ஸவம்

 நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண உற்ஸவம்

 நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண உற்ஸவம்


ADDED : நவ 16, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக நடந்தது.

இக்கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நவ., 4ல் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்ஸவம் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. மணக்கோலத்தில் காந்திமதி அம்மன் எழுந்தருளினார். தங்க பல்லக்கில் சுவாமி நெல்லையப்பர் மேளதாள நாதம் முழங்க ஆயிரங்கால் மண்டபம் வந்தார். பின் மாப்பிள்ளை அழைப்பு சடங்கு நடந்தது.

அதையடுத்து சுவாமி - அம்மனுக்கு மாலை மாற்றும் வைபவம் முடிந்து வேதமந்திரங்கள் முழங்க திருமாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். மஹாதீபாராதனை முடிந்து பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் திருமண விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 9:30 மணிக்கு சுவாமி அம்மன் பூம்பல்லக்கில் பட்டண பிரவேசம் வீதி உலா நடந்தது. நேற்று முதல் நவ., 17 வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us