sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நவ., 10ல் தாமிரபரணியில் நீதிபதிகள் ஆய்வு

/

நவ., 10ல் தாமிரபரணியில் நீதிபதிகள் ஆய்வு

நவ., 10ல் தாமிரபரணியில் நீதிபதிகள் ஆய்வு

நவ., 10ல் தாமிரபரணியில் நீதிபதிகள் ஆய்வு


ADDED : நவ 06, 2024 02:11 AM

Google News

ADDED : நவ 06, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:துாத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுாரைச் சேர்ந்த காமராஜ், 2018ல் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இரு நீதிபதிகள் அமர்வு அவ்வப்போது உத்தரவு பிறப்பிக்கிறது.

இதன் அடிப்படையில் அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது.

திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆஜராகி, 'கழிவுநீர் கலப்பதை தடுக்க இரண்டாம் கட்ட பணியில் 90 சதவீதம் முடிந்துள்ளது. மீதம் 10 சதவீத பணி டிசம்பரில் முடிவடையும். மூன்றாம் கட்ட பணி 2025 செப்டம்பருக்குள் நிறைவடையும்' என, தெரிவித்தார்.

நீதிபதிகள், 'நாங்கள் இருவரும் நவ., 10ல் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம். உடன் திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் வர வேண்டும். ஆய்விற்கு பின் மேல் நடவடிக்கை குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும். விசாரணை நவ., 15க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us