/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சிலிண்டர் வெடித்து பெண் பலி ரூ.23.89 லட்சம் வழங்க உத்தரவு
/
சிலிண்டர் வெடித்து பெண் பலி ரூ.23.89 லட்சம் வழங்க உத்தரவு
சிலிண்டர் வெடித்து பெண் பலி ரூ.23.89 லட்சம் வழங்க உத்தரவு
சிலிண்டர் வெடித்து பெண் பலி ரூ.23.89 லட்சம் வழங்க உத்தரவு
ADDED : பிப் 19, 2026 05:53 AM

திருநெல்வேலி: சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததால் வீடு இடிந்து பெண் இறந்த சம்பவத்தில் ரூ.23.89 லட்சம் இழப்பீடு வழங்க திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தர விட்டது.
அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த முருகனின் வீடு 2017 செப்.,21ல் காஸ் சிலிண்டர் வெடித்ததால் இடிந்தது. இதில் அவரது மனைவி சண்முகம் 52, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். ரெகுலேட்டர் தானாக திறந்து காஸ் வெளியேறிய நிலையில், அதிக மின் அழுத்தம் காரணமாக சிலிண்டர் வெடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக அவரது மகன் கார்த்திக் திருநெல்வேலி நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம், காஸ் நிறுவனம், டிஸ்ட்ரி பியூட்டர், மின்வாரிய மேற்பார்வை பொறி யாளரின் சேவை குறைபாடே உயிரிழப்பிற்கு காரணம் என்ற மனுதாரரின் குற்றச்சாட்டை உறுதிபடுத்தியது.
தொடர்ந்து 9 சதவீத வட்டியுடன் ரூ.15 லட்சம், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.23,89,165 நஷ்ட ஈடாக 45 நாட் களுக்குள் சண்முகத்தின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

