ADDED : பிப் 04, 2025 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூரைச் சேர்ந்தவர் சங்கர், 52. இவர் வேப்பிலாங்குளம் ஊராட்சியில், கிளார்க்காக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். நேற்று காலை வேப்பிலாங்குளம் ஊராட்சிக்கு டூ - வீலரில் சென்று கொண்டிருந்தார். பெருங்குடி அருகே அவரை வழிமறித்த நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினர்.
பணகுடி போலீசார் சங்கரின் உடலை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். ஊராட்சி பணிகள் தொடர்பான முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

