sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சாயக்கழிவால் நிறமாறிய நிலத்தடி நீர் மாசு கட்டுப்பாட்டுவாரியம் சோதனை

/

சாயக்கழிவால் நிறமாறிய நிலத்தடி நீர் மாசு கட்டுப்பாட்டுவாரியம் சோதனை

சாயக்கழிவால் நிறமாறிய நிலத்தடி நீர் மாசு கட்டுப்பாட்டுவாரியம் சோதனை

சாயக்கழிவால் நிறமாறிய நிலத்தடி நீர் மாசு கட்டுப்பாட்டுவாரியம் சோதனை


ADDED : நவ 04, 2025 01:25 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், இ.ஆர்., தியேட்டர், ராமசாமி தெரு, ஆர்.எஸ்., சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீரால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், நேற்று முன்தினம், குழாயை திறந்தால் சிவப்பு, ரோஸ் நிறத்தில் தண்ணீர் வருகிறது. இ.ஆர்., தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கிணற்று நீரிலும் சாயக்கழிவுநீர் கலந்ததால், தண்ணீர் நிறமாறி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, நேற்று நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி மற்றும் அதிகாரிகள், சாயக்கழிவுநீரால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்தனர். முதலில், சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட கிணற்றை ஆய்வு செய்தனர். பின், கிணற்று நீரை எடுத்து பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வீடுதோறும் சென்று குடிநீரை ஆய்வு செய்து பரிசோதனை செய்தனர். பாதிக்கப்பட்ட தண்ணீரை மாதிரி எடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us