sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

வருமானத்திற்கு அதிகமாக 270 சதவீதம் சொத்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் ரெய்டு

/

வருமானத்திற்கு அதிகமாக 270 சதவீதம் சொத்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக 270 சதவீதம் சொத்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக 270 சதவீதம் சொத்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் ரெய்டு

2


ADDED : அக் 25, 2025 01:17 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:17 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: வருமானத்தை விட அதிக அளவில் சொத்து சேர்த்ததாக கனிம வளத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர் 57 வீடுகள் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த தாமஸ் மகன் செல்வசேகர் 57. கனிமவளத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். கன்னியாகுமரி, தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணிபுரிந்து தற்போது திண்டுக்கல்லில் பணியாற்றுகிறார்.

2015 முதல் 2022 வரை 7 ஆண்டுகளில், அவர் அதிகாரப்பூர்வ வருமானம் ஒரு கோடியே 3 லட்சத்து 76 ஆயிரத்தை விட அதிகமாக ரூ. 3 கோடியே 22 லட்சத்து 95 ஆயிரம் வருமானம் பெற்றுள்ளார்.இது அவரது வருமானத்தை விட 270 சதவீதம் ஆகும்.

2023ம் ஆண்டில் இவரை விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பில் வைத்து சொத்து விபரங்களை சேகரிக்க துவங்கினர். ரூ.2 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆவணங்களை விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி.ராமச்சந்திரன் தலைமையில் சேகரித்தனர். இதையடுத்து செல்வசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

செல்வசேகர் குடும்பத்தினர் திருநெல்வேலியில் என்.ஜி.ஓ. காலனி மகிழ்ச்சி நகர் அருகே வீமா சதுக்கத்தில் பங்களாவில் வசிக்கின்றனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே ஏழுமலையான் நகரில் வாடகை வீட்டில் செல்வசேகர் தனியாக வசிக்கிறார்.

இவரது இரு வீடுகள், அலுவலகங்களில் நேற்று சோதனை நடந்தது.

திருநெல்வேலியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., மெஸ் கலரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள், சொத்து தொடர்பான பதிவுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.

செல்வசேகர் மனைவி முருகம்மாள் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. செல்வசேகர் தம்பதியருக்கு ஆகாஷ், சந்தீப் குமார் மற்றும் அனுஷா நாராயணி என்ற மூன்று வாரிசுகள் உள்ளனர். இவர்கள் மூவரும் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us