/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
போக்குவரத்து விதிமீறல் என லிங்க் அனுப்பி ரூ.36,000 'அபேஸ்'
/
போக்குவரத்து விதிமீறல் என லிங்க் அனுப்பி ரூ.36,000 'அபேஸ்'
போக்குவரத்து விதிமீறல் என லிங்க் அனுப்பி ரூ.36,000 'அபேஸ்'
போக்குவரத்து விதிமீறல் என லிங்க் அனுப்பி ரூ.36,000 'அபேஸ்'
ADDED : பிப் 03, 2026 05:39 AM
திருநெல்வேலி,: போக்குவரத்து விதிமீறல் என அலைபேசியில் வந்த லிங்கை தொட்டதால் திருநெல்வேலியில் ஒர்க் ஷாப் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.36,000 பறிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபர், ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்படுவதாக அவரது அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. தெரிந்த போலீஸ்காரரின் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்ததால் அதிலிருந்த லிங்கை ஒர்க் ஷாப் உரிமையாளர் கிளிக் செய்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.36,000 எடுக்கப்பட்டது. போலீசில் விசாரித்தபோது குறிப்பிட்ட போலீஸ்காரரின் எண்ணிலிருந்து பலருக்கும் குறுஞ்செய்தி சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் திருநெல்வேலி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

