sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

/

கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்


ADDED : ஏப் 29, 2025 07:11 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கடல் வழியே இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கூடங்குளம் கடற்கரை வழியே இலங்கைக்கு மஞ்சள், பீடி இலைகள், அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றன. நேற்று உலகரட்சகர்புரம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு லாரியில் 2 டன் பீடி இலைகள் இருந்தன. அதன் இலங்கை மதிப்பு ரூபாய் 50 லட்சம். அதன் பின்னால் வந்த காரில் கடத்தல் கும்பல் இருந்தது.

போலீசை கண்டதும் காரை வேறு புறம் திருப்பிச் சென்றனர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். இதில் கூத்தங்குழி ஜனா 70, ஸ்ரீவைகுண்டம் சண்முகம் 25, ஏரல் சந்தோஷ் குமார் 23, துாத்துக்குடி அந்தோணிராஜ் 36, தளபதி சமுத்திரம் முத்துக்குமார் 42, கைது செய்யப்பட்டனர். லாரி, கார் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us