sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தந்தை கொலை மகன் கைது

/

தந்தை கொலை மகன் கைது

தந்தை கொலை மகன் கைது

தந்தை கொலை மகன் கைது


ADDED : ஏப் 02, 2025 01:31 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் பூர்வீக நிலத்தை விற்றதில் ரூ. 60 லட்சம் கொடுத்த நிலையில் கூடுதல் பணம் கேட்டு தராததால் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி அருகே முத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பூலையா 70. விவசாயி.

இவரது மனைவி லட்சுமி. இவர்களது ஒரே மகன் கணேசன் 45. திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். பூலையா தனது தந்தை பெயரில் பூர்விக நிலத்தை ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பில் விற்றுள்ளார். அதில் கிடைத்த தொகையில் மகன் கணேசனுக்கு ரூ. 60 லட்சம் கொடுத்துள்ளார்.அதில் கணேசன் குடும்பத்தினருக்கு நகைகள் வாங்கியுள்ளார்.

பழைய வீட்டை இடித்து புதுப்பித்து கட்டிவருகிறார். அதற்கு மேலும் ரூ.10 லட்சம் தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் போதிய தொகை தந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இதனால் ஆத்திரமுற்ற கணேசன், நேற்று மதியம் மருத்துவமனைக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த பூலையாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.சிவந்திபட்டி போலீசார் கணேசனை கைது செய்தனர். அவரது மனைவி சங்கரம்மாளையும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us