/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பள்ளியில் 'ஆசிட்' பட்டு மாணவி பார்வை பாதிப்பு
/
பள்ளியில் 'ஆசிட்' பட்டு மாணவி பார்வை பாதிப்பு
ADDED : பிப் 13, 2024 03:51 AM
தாழையூத்து : திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, சத்திரம் குடியிருப்பு பகுதியில் இருபாலர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்குள்ள சோதனை கூடத்தில் பாட்டிலில் இருந்து ஆசிட் சிதறியதில், வர்ஷா, 14, என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியின் வலது கண் பார்வை பாதிக்கப்பட்டது.
அவர், திருநெல்வேலி தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவியின் பெற்றோரிடம், 10,000 ரூபாய் கொடுத்து சமாளித்துக் கொள்ளுமாறு கூறி உள்ளனர். பெற்றோர் அதை திரும்ப கொடுத்து விட்டனர்.
நேற்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில், மாணவியின் தாய் சண்முகசுந்தரி, அகில இந்திய மாதர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறைக்கோ, மாவட்ட நிர்வாகத்துக்கோ தகவல் தெரிவிக்காத பள்ளி ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.