/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
உச்சிஷ்ட விநாயகர் மீது விழும் சூரிய ஒளிக்கதிர்
/
உச்சிஷ்ட விநாயகர் மீது விழும் சூரிய ஒளிக்கதிர்
ADDED : ஏப் 15, 2025 06:48 AM

திருநெல்வேலி : திருநெல்வேலியில் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு முதல் மூன்று நாட்களுக்கு சூரிய ஒளி மூலவர் மீது விழும் நிகழ்வை பக்தர்கள் வழிபட்டனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் தாமிரபரணி ஆற்றங்கரையில் மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயில் பழமையானது. தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ஏப்., 14 முதல் 3 நாட்கள் காலையில் சூரிய ஒளிக்கதிர்கள் மூலவர் மீது விழும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வைத் திரளான பக்தர்கள் தரிசித்தனர். சூரிய ஒளி நேரடியாக மூலவர் மீது விழும் வகையில் கட்டிடக்கலை அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநயினார் சுவாமி கோயில் உட்பட மேலும் சில கோவில்களிலும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தினங்களில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் வகையில் கட்டிடக்கலை அமைக்கப்பட்டுள்ளது.