/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
போலீஸ்காரர் கார் சூறை மூவருக்கு மாவுக்கட்டு
/
போலீஸ்காரர் கார் சூறை மூவருக்கு மாவுக்கட்டு
ADDED : பிப் 16, 2025 02:24 AM
முக்கூடல்: திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்வ குமரேசன், 38; நக்சல் தடுப்பு போலீஸ் பிரிவில் பணியாற்றுகிறார். பிப்., 9ல், இவர் அலுவலக பணியாக மதுரை சென்றிருந்தார்.
இரவில் இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் மூவர், செல்வ குமரேசன் காரை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர். விசாரணையில், அந்த மூன்று பேரும் சுத்தமல்லி அருகே சங்கன்திரடை சேர்ந்த முப்பிடாதி, 28, முத்துக்குமார், 27, அய்யப்பன், 25, என, தெரியவந்தது.
செல்வ குமரேசன் மூன்று மாதங்களுக்கு முன், சுத்தமல்லி ஸ்டேஷனில் பணியாற்றிய போது போதையில் தகராறு செய்த முப்பிடாதி, முத்துகுமார் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்து இந்த தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்கள் பதுங்கியிருந்த கட்டடத்திற்கு போலீசார் கைது செய்ய சென்றபோது, மூவரும் மாடியில் இருந்து குதித்து தப்பியதில், மூவருக்கும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.