sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

இறந்தவர் தலையுடன் வந்த சாமியாடி

/

இறந்தவர் தலையுடன் வந்த சாமியாடி

இறந்தவர் தலையுடன் வந்த சாமியாடி

இறந்தவர் தலையுடன் வந்த சாமியாடி

1


ADDED : ஜூன் 08, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 12:50 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:வீரவநல்லுார் அருகே கோயில் கொடை விழாவில் சுடுகாட்டுக்கு வேட்டைக்குச் சென்ற சுடலைமாடசாமி ஆடுபவர் கையோடு இறந்தவரின் தலையுடன் வந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுார் அருகே உப்பூரில், ஊர்க்காடு சுடலைமாடசாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவு கொடை விழா நடந்தது. பின்னர் சாமக்கொடையில், சாமி ஆடுபவர் தாமிரபரணி கரையோரம் சுடுகாட்டிற்கு வேட்டைக்குச் சென்று திரும்பினார்.

அப்போது சாமியாடியின் கையில் மனித தலை ஒன்றும், கை, கால்களும் தனித்தனியே இருந்தன. அவை சமீபத்தில் புதைக்கப்பட்டவரின் உடல்பாகமாக இருக்கலாம் என தெரிகிறது. வழக்கமாக இதுபோன்ற விழாக்களில் வேட்டைக்குச் செல்லும் சாமியாடிகள் ஓரிரு எலும்பு துண்டுகளை மட்டும் எடுத்து வருவர். ஆனால் இவர் தலை மற்றும் உடலை தனித்தனியே எடுத்து வந்தது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us