sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கலை, இலக்கிய மன்ற துவக்க விழா

/

கலை, இலக்கிய மன்ற துவக்க விழா

கலை, இலக்கிய மன்ற துவக்க விழா

கலை, இலக்கிய மன்ற துவக்க விழா


ADDED : ஆக 04, 2011 01:27 AM

Google News

ADDED : ஆக 04, 2011 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யு.ஏ., பள்ளியில் சர்.சி.வி.ராமன் அறிவியல் மன்றம் மற்றும் பாரதியார் கலை இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார்.

பள்ளி பிளஸ் 2 மாணவி உமா கார்த்திகா வரவேற்றார். அறிவியல் மன்றத்தின் ஆண்டறிக்கையை ஆசிரியர் சுரேஷ்பாபு வாசித்தார். வேதியியல் 2011ம் ஆண்டு என்ற தலைப்பில் மாணவிகள் சங்கீதா, பிலோமின் ஏஞ்சல் பேசினர்.அம்பை கலைக்கல்லூரி முதல்வர் வேலையா, ஆழ்வார்குறிச்சி கல்லூரி வேதியியல் துறை தலைவர் அழகுமுத்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். பாரதியார் கலை இலக்கிய மன்ற துவக்க விழாவில் மன்ற செயலாளர் இளங்கோ மன்றம் குறித்து பேசினார். மன்ற மாணவர் செயலாளர் இளங்கோ பிரபு செல்வகணேஷ் வரவேற்றார்.கர்ம வீரர் காமராஜர் என்ற தலைப்பில் மாணவி சக்திசிவப்பிரியா பேசினார். விழாவில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் முனைவர் முருகன் காமராஜவின் கல்விப்பணிகுறித்தும், புனித யோவான் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் வளன் அரசு இலக்கிய நயம் குறித்தும் பேசினர்.விழாவில் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.










      Dinamalar
      Follow us