sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ரமலானையொட்டி இரவு கடைகளுக்கு அனுமதி முஸ்லிம்லீக் கலெக்டருக்கு வலியுறுத்தல்

/

ரமலானையொட்டி இரவு கடைகளுக்கு அனுமதி முஸ்லிம்லீக் கலெக்டருக்கு வலியுறுத்தல்

ரமலானையொட்டி இரவு கடைகளுக்கு அனுமதி முஸ்லிம்லீக் கலெக்டருக்கு வலியுறுத்தல்

ரமலானையொட்டி இரவு கடைகளுக்கு அனுமதி முஸ்லிம்லீக் கலெக்டருக்கு வலியுறுத்தல்


ADDED : ஆக 06, 2011 01:56 AM

Google News

ADDED : ஆக 06, 2011 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இரவு டீக்கடை, ஓட்டல்களை நடத்த அனுமதி வழங்க முஸ்லிம்லீக் வலியுறுத்தியது.இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட துணைத்தலைவர் திவான்முகைதீன் கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய மனு:நெல்லை மாவட்டத்தில் டீக்கடை, ஓட்டல்களை இரவு 12 மணிக்கு மூட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

முஸ்லிம்கள் அனுஷ்டிக்கும் ரம்ஜான் நோன்பு கடந்த 2ம்தேதி துவங்கியது. முஸ்லிம்கள் ஒரு மாதம் பகலில் நோன்பு இருந்து இரவு சாப்பிடுவர். பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகை இரவு 10 மணிக்கு துவங்கி 12 மணி வரை நடக்கும். நோன்பு விதிப்படி அதிகாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் டிபன் அல்லது சாப்பாடு சாப்பிட்டுவிட்டு நோன்பு மேற்கொள்வர்.ஓட்டல்களை இரவு 12 மணிக்கு மூடுவதால் வெளியூர்கள் பயணிகள் நோன்பு அனுஷ்டிக்க சிரமப்படுகின்றனர். மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இரவு ஓட்டல்கள், டீக்கடைகளை திறக்க கலெக்டர் அனுமதிக்க வேண்டும். காலை, மாலையில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். நெல்லை மாநகராட்சியில் அதிகாலை 3 மணிக்கு சங்கு ஒலிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us