ADDED : நவ 24, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான், தென்காசி ஆவுடையானூரில் மின்சாரம் தாக்கி இரு வாலிபர்கள் பலியாயினர்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் கண்ணன்கோயில் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ராம்குமார் 25. தனியார் நிறுவன ஊழியர். இவரது சகோதரிக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்தன. அவரது வீட்டில் பந்தல், மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி ராம்குமார் பலியானார். கங்கைகொண்டான் போலீசார் விசாரிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரைச் சேர்ந்த டேவிட் ராஜா மகன் நிக்சன் ராஜா 21. வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். மழை பெய்து கொண்டிருந்த போது மாட்டு தொழுவத்தில் மின்விளக்கு சுவிட்ச் போடும்போது மின்சாரம் தாக்கி பலியானார். பாவூர்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

