ADDED : ஜன 19, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே முன்னீர்பள்ளம், கீழச்செவல் நயினார்குளத்தைச் சேர்ந்தவர் பலவேசம், 37; விவசாயி. மனைவி தமிழரசி, 31. தம்பதிக்கு 9, 7 வயதில் இரு மகன்கள் உள்ளனர். தமிழரசி, திருநெல்வேலியில் நகைக்கடையில் வேலை பார்த்தார். அடிக்கடி மொபைல் போனில் பேசியதால், பலவேசம் கண்டித்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வந்த தமிழரசி, நீண்ட நேரம் மொபைல் போனில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பலவேசம், இரவில் துாங்கிக் கொண்டிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அரிவாளுடன் முன்னீர்பள்ளம் போலீசில் சரண்டைந்தார்.

