sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

/

திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

திருத்தணி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்


ADDED : பிப் 27, 2025 01:03 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று, மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள் மற்றும், 1,008 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று, மாலை 6:00 மணிக்கு மூன்று யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடந்தது.

தொடர்ந்து, மூலவருக்கு முதற்கால சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இரவு 10:00 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இரவு 11:00 மணிக்கு மூலவருக்கு மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு நான்காம் கால அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுதும் கோவில் நடை திறந்திருந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us