/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உங்களை தேடி உங்கள் ஊரில்' ஆவடியில் 18ல் கள ஆய்வு
/
உங்களை தேடி உங்கள் ஊரில்' ஆவடியில் 18ல் கள ஆய்வு
ADDED : செப் 12, 2024 08:57 PM
திருவள்ளூர்:'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' கள ஆய்வு, வரும் 18ம் தேதி ஆவடி வட்டம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி; உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
அதன்படி, இம்மாதம் மூன்றாவது புதன்கிழமை அன்று வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தின் இம்மாதத்திற்கான, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின்படி, வரும் 18ல் ஆவடி வட்டம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.