/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்குன்றம், ஆவடியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்
/
செங்குன்றம், ஆவடியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : மார் 05, 2025 02:13 AM

சென்னை:செங்குன்றம் சோதனைச் சாவடி அருகே, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த செங்குன்றம் மதுவிலக்கு போலீசார், பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், மூட்டை ஒன்றில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றை கடத்தி வந்த இருவரை கைது செய்து, செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள், டேவிட்ராஜ், 26 மற்றும் சரண்தீப், 23, என்பது தெரிந்தது. இருவரும் ஒடிசாவை சேர்ந்தவர்கள்.
அவர்கள், ஒடிசாவில் இருந்து, ரயில் வாயிலாக கஞ்சா கடத்தி வந்து, பேருந்து வாயிலாக கோவைக்கு செல்ல திட்டமிட்டிருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர். அதேபோல், ஆவடி அடுத்த கன்னடபாளையம், சவுத்ரி தெருவில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து, அவரது பையை சோதனை செய்தனர்.
அப்போது, அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த திலீபன், 22, என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.