sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

73 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் 40ல் மின்வசதி இல்லை

/

73 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் 40ல் மின்வசதி இல்லை

73 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் 40ல் மின்வசதி இல்லை

73 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் 40ல் மின்வசதி இல்லை


ADDED : மார் 01, 2025 12:36 AM

Google News

ADDED : மார் 01, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி தாலுகாவில், மொத்தம், 74 வருவாய் கிராமங்கள், 6 குறுவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் என, 74 பேரும், ஒரு குறுவட்டத்திற்கு ஒரு வருவாய் ஆய்வாளர் வீதம் பணியாற்றுகின்றனர்.

ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கி பணிபுரிவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் ஒன்றிய நிர்வாகம் கிராம நிர்வாக அலுவலகங்கள் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன.

தற்போது, கட்டடங்களை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் பல கிராம நிர்வாக அலுவலக கட்டடங்கள் பழுது அடைந்து உள்ளன.

மேலும் பெரும்பாலான கிராம அலுவலக கட்டடங்களில் மின்வசதி இல்லாததால், கிராம அலுவலர்கள், அலுவலகத்தில் தங்கி பணிபுரிவதற்கு சிரமப்படுகின்றனர். இதனால் பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இது குறித்து திருத்தணி தாசில்தார் மலர்விழி கூறியதாவது:

திருத்தணி தாலுகாவில், 73 கிராம நிர்வாக அலுவலகம் இருந்தது. இதில் பத்து கட்டடங்கள் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன. மேலும், 60 கட்டடங்கள் பழுதடைந்து உள்ளதால், அதை கிராம நிர்வாக அலுவலர்கள் பயன்படுத்த முடியவில்லை.

இதிலும், 40 கட்டடங்களுக்கு மின்வசதியில்லை. கடந்த மாதம் தாலுகாவில் பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம், மின்வசதியில்லாத கட்டடம், குடிநீர் போன்ற அடிப்படை இல்லாத கட்டடங்கள் குறித்து கணக்கெடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளோம்.

தற்போது நான்கு கிராம நிர்வாக அலுவலக கட்டடம் புதியதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் தான் புதிய கட்டடம் கட்டி கொடுத்தும், மின்இணைப்பு உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us