/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கர் ரோப்கார் வளாகத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
/
சோளிங்கர் ரோப்கார் வளாகத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சோளிங்கர் ரோப்கார் வளாகத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சோளிங்கர் ரோப்கார் வளாகத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ADDED : மார் 10, 2025 12:17 AM

சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இத்தலத்தில் நரசிம்ம சுவாமி, யோக நிலையில் அருள்பாலித்து வருகிறார்.
யோக நரசிம்மருக்கு எதிரே சிறிய மலையில் அனுமன் அருள்பாலிக்கிறார்.
யோக நிலையில் உள்ள நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களின் வேண்டுதலை, அனுமன் கேட்டு நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனால், கார்த்திகை மாதத்தில் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் யோக நரசிம்ம சுவாமி மற்றும் அனுமனை வழிபட வந்திருந்தனர். மலைக்கோவிலுக்கு பயணிக்க ஏராளமான பக்தர்கள் ரோப்கார் வளாகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
மேலும், படிகள் வழியாகவும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று, சுவாமியை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோவில் நந்தவனத்தில் பக்தோசித சுவாமிக்கு தவணோத்சவம் நேற்று நடந்தது. நாளை தவணோத்சவம் நிறைவு பெறுகிறது.