sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.10 லட்சம் மது பாட்டில் மாயமானதாக சோதனை

/

ரூ.10 லட்சம் மது பாட்டில் மாயமானதாக சோதனை

ரூ.10 லட்சம் மது பாட்டில் மாயமானதாக சோதனை

ரூ.10 லட்சம் மது பாட்டில் மாயமானதாக சோதனை


ADDED : ஆக 16, 2024 11:10 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிட்கோ தொழில் பூங்காவில் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோன் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது.

இங்கிருந்து மதுபானங்கள் 200க்கும் மேற்பட்ட சில்லரை மதுபான விற்பனை கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இங்கு ஒப்பந்த போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

தொழிலாளர்கள் இரு குழுவாக பணியாற்றுகின்றனர். குழுவினர் ஒருவருக்கு ஒருவர் புகார் கூறி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் காணாமல் போனதாக ஒரு குழுவினர் வதந்தி பரப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் பொறுப்பு மேலாளர் ரேணுகா, வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிகாரிகள் மதுபான பாட்டில்களை ஆய்வு செய்தனர். அதில், மதுபான பாட்டில்கள் இருப்பு சரியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றதாக திருவள்ளூர் தாலுகா போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us