sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெடுஞ்சாலையில் செயல்படாத சிக்னல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்..

/

நெடுஞ்சாலையில் செயல்படாத சிக்னல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்..

நெடுஞ்சாலையில் செயல்படாத சிக்னல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்..

நெடுஞ்சாலையில் செயல்படாத சிக்னல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்..


ADDED : ஏப் 22, 2024 06:49 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தொடுகாடு ஊராட்சி பராசங்குபுரம் அடுத்து உள்ளது காட்டு கூட்டுச்சாலை சந்திப்பு.

திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள இந்த காட்டு கூட்டுச்சாலை சந்திப்பு பகுதி வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, கனரக, இலகுரக வாகனம் என தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இங்கு போக்குவரத்தை சீரமைக்க தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளன. தானியங்கி சிக்னல் செயல்படாமல் உள்ளது. மேலும் போக்குவரத்தை சீர்படுத்த போலீசாரும் இல்லை.

இதனால், இப்பகுதியில் அடிக்கடி வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

மேலும் போக்குவரத்து போலீசாரும் இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுவதோடு, விபத்து அபாயத்திலும் உள்ளனர்.

எனவே, காட்டு கூட்டுச்சாலை சந்திப்பு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னலை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து காவலரை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை பணி மந்தம்


கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி அலுவலகம் அருகே, மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார், வெங்கத்துார் ஆகிய மூன்று ஊராட்சி வழியே, வெள்ளேரி தாங்கல் வழியாக பாப்பரம்பாக்கம் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.

இந்த சாலை முழுதும் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால் இவ்வழியே நடந்த செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் இரவு நேரங்களில், விபத்தில் சிக்கி வருகின்றனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின் 2.9 கி.மீ., துாரமுள்ள இந்த ஒன்றிய சாலையை 1.50 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி 2023ல் துவங்கி நடந்து வந்தது.

இந்நிலையில் தற்போது சாலை சீரமைப்பு பணி கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது அப்பகுதி வாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஒன்றிய அதிகாரிகள சாலை சீரமைப்பு பணிகளை முறையாக ஆய்வு செய்யாததே காரணம் என அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் துாசி மற்றும் புகையால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஒன்றிய சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us