sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் வெட்டி கொலை

/

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் வெட்டி கொலை

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் வெட்டி கொலை

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் வெட்டி கொலை


ADDED : செப் 13, 2024 12:18 AM

Google News

ADDED : செப் 13, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பில்லாக்குப்பம் கிராமத்தில் வசித்தவர் மணி மகன் அஜய், 22. வெல்டர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் பில்லாக்குப்பம் கிராமத்தில் ஒதுக்குபுறமாக உள்ள தைலந்தோப்பு அருகே உள்ள மைதானத்தில், நேற்று மதியம், கழுத்து, பின் தலை மற்றும் உடல் முழுதும் மர்ம நபர்களால் வெட்டுப்பட்டு கொடூரமாக இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., அண்ணாதுரை ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு சம்பவம் நடத்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

முன்விரோதம் காரணத்தால் நடந்த கொலையா அல்லது நண்பர்களுடன் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us