sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மீன் ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து 14 பேர் காயம்

/

மீன் ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து 14 பேர் காயம்

மீன் ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து 14 பேர் காயம்

மீன் ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து 14 பேர் காயம்


ADDED : ஆக 25, 2024 11:07 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்களூரைச் சேர்ந்த குப்பம்மாள், 50, சரத்குமார், 30, உள்ளிட்ட 14 பேர் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு, சென்னை காசிமேடுக்கு மீன் வாங்கி வர 'டாடா ஏஸ்' வாகனத்தில் சென்றனர்.

நேற்று காலை 8:00 மணியளவில், வழக்கம்போல சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினர். திருவள்ளூர் அடுத்த ராமஞ்சேரி அருகே வந்த போது, வாகனத்தின் டயர் வெடித்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில், வாகனத்தில் பயணித்த 13 பெண்கள், ஒரு ஆண் உட்பட 14 பேரும் காயமடைந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அறிந்த கனகம்மாசத்திரம் போலீசார், ஓட்டுனர் நரேந்திரன், 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us