/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேதாத்திரி மகரிஷி பள்ளி மாணவர்கள் சாதனை
/
வேதாத்திரி மகரிஷி பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : மே 11, 2024 09:44 PM
திருத்தணி:திருத்தணி எஸ்.வி.ஜி.புரத்தில் வேதாத்திரி மகரிஷி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளி அளவில் மாணவி ஹேமாவதி, 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி ஜோஷ்மிதா, 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி கோபிகா, 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
மேலும், ஒன்பது மாணவர்கள் கணிதத்திலும், 11 மாணவர்கள் அறிவியலிலும், 5 மாணவர்கள் சமூக அறிவியலிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர் மற்றும் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், 'சென்டம்' அடித்த மாணவர்களை பள்ளி தாளாளர் வெங்கடேசலு, பொருளாளர் ஜெயச்சந்திரன் பள்ளி முதல்வர் ஆசீர்வாதம் எபிநேசர், கணித ஆசிரியர் தியாகராஜன், அறிவியல் ஆசிரியர் புள்ளையா ஆகியோர் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினர்.
இந்த பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொதுதேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.