நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, மேட்டு தெரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே, அரசு மதுக்கடை இயங்காத காலை நேரத்தில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த கொண்டிருந்த கும்மிடிப்பூண்டி சுதர்சனம், 38, நாகராஜ், 38, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம், 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.