/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் விண்ணப்பிக்கலாம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 19, 2024 11:16 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி செப்., மற்றும் அக்., மாதம் நடைபெற உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில், 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் போட்டி நடைபெறும்.
மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, முதல் பரிசாக 1 லட்சமும், 2ம் பரிசு 75,000 , 3ம் பரிசு 50,000 ரூபாய் வழங்கப்படும்.
குழு போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே 75,000, 50,000 மற்றும் 25,000 ரூபாய் வழங்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், http://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்யலாம். போட்டிகளில் பங்கேற்க, வரும் 25க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரிலோ 95140 00777 என்ற மொபைல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

